3 2
இலங்கைசெய்திகள்

நாட்டின் மின்சாரக் கட்டணம் திருத்தம் – வெளியான தகவல்

Share

நாட்டின் மின்சாரக் கட்டணம் திருத்தம் – வெளியான தகவல்

மின் கட்டணம் குறைப்பு சதவீதம் 35% முதல் 40% வரை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க (Sanjeewa Dhammika) தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நீர்மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார சபை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த(01) நாட்டில் மொத்த மின்சாரத் தேவையில் 62.2% ஆன மின்சாரம் நீர் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் 35% முதல் 40% வரை மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

“தற்போதைக்கு, காலாண்டு முறையை எடுத்துக் கொண்டால், நான்காவது மின்சாரத் திருத்தத்தை நாம் அனுபவிக்க வேண்டும்.

ஆனால், அதை அனுபவிப்பதை காட்டிலும், இந்த அரசு இதைப் பற்றி யோசிக்கவே இல்லை என்றே நமக்குத் தோன்றுகிறது.

இந்த மின்சார சபைக்கு நியமிக்கப்பட்ட தலைவருக்கு மின் துறையில் ஒப்பந்த நிறுவனம் ஒன்று உள்ளது. மேலும் துணைத் தலைவருக்கும் மின் துறையில் ஒப்பந்த நிறுவனம் உள்ளது.

இப்படி இருக்கையில், மின் கட்டணம் குறையுமா?” எனவே, இம்முறை திருத்தத்தில், மின் கட்டணம் குறைப்பு சதவீதம் 35% முதல் 40% வரை வழங்கப்பட வேண்டும்.

ஏனென்றால் மின்சார சபை தற்போது 200 பில்லியனுக்கும் அதிகமான இலாபத்தைப் பெற்று வருகிறது,

Share
தொடர்புடையது
001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...