5 54
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

Share

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான (Welfare Benefits Board) விண்ணப்பங்களை வழங்குவதற்கு இன்று (25) முதல் மேலதிக அவகாசம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

அந்த கால அவகாசம் அடுத்த மாதம் 2ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக .நலன்புரிப் பலன்கள் வாரியம் அறிவித்துள்ளது.

அதற்குள் நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பிரதேச செயலகத்திலோ அல்லது நலன்புரிப் பலன்கள் சபையின் இணையத்தளத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.

முதல்கட்ட பயனாளிகள் தேர்வின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படும் என பயனாளிகள் நல வாரியம் அறிவித்துள்ளது.

அதற்கான கால அவகாசம் இன்று முதல் அடுத்த மாதம் 15ம் திகதி வரை அமுலில் உள்ளது. இரண்டாம் கட்டத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 455,000 ஆகும்.

முதற்கட்டமாக பதினேழு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...