mahinda Rajapakse
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மகிந்த அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா…?

Share

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது. அவர் தொடர்ந்தும் செயற்பாட்டு அரசியலில் இருக்க வேண்டும்.” – என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் என தகவல்கள் பரப்பட்டுவருகின்றன.

இதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்கக்கூடும். பிரதமரை வெளியேற்றுவதற்கு சிலர் முற்படக்கூடும். பிரதமர் ஓய்வுபெறுவதாக இருந்தால் எமக்கு அறிவித்துவிட்டே செல்வார். அவர் தற்போது ஓய்வுபெறக்கூடாது. ஜனாதிபதிக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

கட்சி அரசியல்தான் இந்த நாட்டுககு சாபக்கேடு. தன்னை சூழவுள்ள சூழ்ச்சிக்காரர்களை ஜனாதிபதி இனங்காண வேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....