24 661dcbae0f590
இலங்கைசெய்திகள்

ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரானிய அதிகாரிகள்

Share

ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரானிய அதிகாரிகள்

ஈரான் நாட்டுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் “பயங்கரமான மற்றும் ஒன்றுபட்ட” பதிலடியை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய இராணுவ தினத்தைக் குறிக்கும் வகையில், ஈரானின் ஆயுதப் படைகளின் வலிமைமிக்க தற்காப்பு மற்றும் தடுப்பு சக்தியை மௌசவி வலியுறுத்தி உரையாற்றுகையிலேயே இதனை கூறியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் ஈரானின் இராஜதந்திர வளாகத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், IRGC படையினால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் என்று பெயரிடப்பட்ட முன்னோடியில்லாத இந்த வான்வழித் தாக்குதல், இஸ்ரேலிய அதிகாரிகளை அச்சுறுத்திய வகையில் அமைந்திருந்தது.

இஸ்ரேலிய ஆட்சிக்கு எதிரான ஈரானின் நடவடிக்கை ஈரானிய ஆயுதப் படைகளின் தீர்மானம் மற்றும் திறனின் ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியது என மௌசவி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை எதிராலியின் “சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ஒரு தீர்க்கமான பதிலடி” என்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு, குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் காஸாவின் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலியர்கள் ஈரானிய பிரதேசத்தின் மீது தங்கள் கண்ணை தாக்குதல் வடிவில் செலுத்தினால் மிகவும் வலுவான பதிலடியை என ஈரானின் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனி எச்சரிகை விடுத்துள்ளார்.

வெளியுறவுக் கொள்கைக் குழுவின் நேர்காணலில் அலி பகேரி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

”டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் தூதரகப் பிரிவு மீது தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலிய படைகள் ஒரு மூலோபாயத் தவறைச் செய்துள்ளனர்.

இஸ்லாமியர்களின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் திறனை சர்வதேசம் அறிய வழிவகுத்துள்ளது.

எங்கள் தூதரகத்தின் தூதரகப் பிரிவை அவர்கள் தாக்காமல் இருந்திருந்தால், இந்த நிலைமைகள் எழுந்திருக்காது.

இஸ்ரேலிய ஆட்சி நடவடிக்கைகள் போதுமான பகுத்தறிவுடன் இருந்தால், அது அத்தகைய தவறை மீண்டும் செய்யாது.

ஏனெனில் ஈரான் இதையும் விட கடினமான பதிலடியை வழங்கும் என அவர்களுக்கு தெரியும்.

இஸ்லாமிய குடியரசு தனது நலன்களையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாப்பதற்காக இஸ்ரேல் இராணுவத்தை தண்டிக்க முடிவு செய்தபோது, ​​அவர்களின் அடுத்த தாக்குதலை எதிர்பதற்கான திட்டத்தையும் ஈரான் கொண்டிருந்தது” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...