24 661e1725035a9
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை

Share

மத்திய கிழக்கில் பதற்றம் – இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இஸ்ரேல் மீது கடந்த 13ஆம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், வான்வெளி மூடப்பட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் கொழும்பிலிருந்து டெல் அவிவ் நகருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி காலை ஆர்க்கியா என்ற விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயண ஏற்பாடுகளை உறுதிசெய்து, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர், ஏற்கனவே உள்ள விமானப் பயணச்சீட்டுகளைக் கொண்டுள்ள பயணிகள் தமது முன்பதிவுகளை உறுதிப்படுத்துமாறு தூதுவர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.

இதுமட்டுமன்றி புது டெல்லியிலிருந்து டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு ஏர்-இந்தியா (Air india) விமானங்கள் ஏப்ரல் 18 முதல் மீண்டும் தொடங்கும் என்பதோடு இது கொழும்பிலிருந்து புது டெல்லி வழியாக வரும் பயணிகள் இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், FLY DUBAI ஏர்லைன்ஸ் டுபாய் மற்றும் அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு விமானங்களை ஆரம்பித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...