Anura Kumara Dissanayaka 1000x584 1
அரசியல்இலங்கைசெய்திகள்

இடைக்கால அரசால் பயன் இல்லை! – அநுர வலியுறுத்து

Share

“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடைக்கால அரசமைப்பதால் பயன் ஏற்படாது. அவரால் நாட்டை கட்டியெழுப்பவும் முடியாது. எனவே , கோத்தாபய ராஜபக்சவும் பதவி விலகவேண்டும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ராஜபக்ச குடும்பம் அதிகார போதையில் மயங்கியுள்ளது. மஹிந்த உள்ளிட்ட குழுவினரே வன்முறைக்கு வழிவகுத்தனர். ஆதரவாளர்கள் எதற்காக அழைக்கப்பட்டனர் என்பதை மஹிந்த ராஜபக்ச தமதுரையில் தெளிவுபடுத்தவில்லை. மோதத் தயார் என்ற தகவலையே அவர் வழங்கினார். எனவே, நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்ச பொறுப்பை ஏற்கவேண்டும். மக்களின் நியாயமான போராட்டங்களை ஆளுங்கட்சியினரே வன்முறையாக மாற்றினர்.

சில ஆயுதங்கள் வெளியில் இருந்து எடுத்துவரப்பட்டுள்ளன. சில ஆயுதங்கள் அலரிமாளிகையில் வழங்கப்பட்டுள்ளன. எனவே, இது திட்டமிட்ட அடிப்படையிலான தாக்குதலாகும். வன்முறையாளர்கள் காலிமுகத்திடல் செல்வதை பொலிஸார் தடுத்து நிறுத்தவில்லை. போராட்டக்காரர்களை நோக்கியே கண்ணீர்புகைகூட வீசப்பட்டுள்ளது. இதற்கு பொலிஸ்மா அதிபரும் பொறுப்புக்கூற வேண்டும்.

ஜனாதிபதியால் நாட்டை ஆளமுடியாது. அவரை வைத்துக்கொண்டு இடைக்கால அரசு அமைப்பதிலும் பயன் இல்லை. எனவே, அவரும் பதவி விலக வேண்டும். சம்பவத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” -என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...