1667784466 sri lankan boat 2
இந்தியாஇலங்கைசெய்திகள்

யாழ் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் கைது!!

Share

யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் – புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த கடற்தொழிலார்கள் இரு படகுகளில் எல்லை தாண்டி, கடற்தொழிலில் ஈடுபட்டு இருந்த வேளை இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் நான்கு கடற்தொழிலாளர்களும்,  பருத்தித்துறை கடற்பரப்பில் 12 கடற்தொழிலார்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டன

கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக நடவடிக்கைக்காக நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் கைதான நால்வரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் , பருத்தித்துறை கடற்பரப்பில் கைதான 12 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...