Dollar
இலங்கைஅரசியல்இந்தியாசெய்திகள்

இலங்கைக்கு கடன் வழங்கும் இந்தியா: சீனாவை எதிர்க்கவா?

Share

இலங்கைக்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்குவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் இக்கடன் வழங்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது.

இந்தியா வழங்கும் இந்தக் கடன் பணமாக மீளப்பெறப்படாமல், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும், பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதேவேளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அண்மைய இந்திய விஜயத்தின் போதே இதுதொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது

இதேவேளை, அண்மையில் சீனாவிடமிருந்து 150 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதாகவும், கடனாக ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் கட்டாரிடமிருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களைப் பெறப்பட உள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...