24 664b65c06727c
இலங்கைசெய்திகள்

இலங்கையை மெய்நிகர் மாகாணமாக மாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள இந்தியா

Share

இலங்கையை மெய்நிகர் மாகாணமாக மாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள இந்தியா

2022ஆம் ஆண்டு இலங்கை திவாலானதன் பின்னர் சீனாவைக் காட்டிலும் இந்தியா இலங்கையில் அதிக செல்வாக்கை செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் இலங்கையை மெய்நிகர் மாகாணமாக மாற்றுவதற்கு இந்தியா பெறும் மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும் என்று இலங்கையின் வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவான International-relations analyst of Factum இன் தலைமை சர்வதேச உறவுகள் ஆய்வாளர் உதித தேவப்ரியா குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான முக்கிய கருத்தொன்றை சீன செய்தித்தாளொன்று செய்தியாக்கியுள்ளது.

இந்தியா, ஏற்கனவே கொழும்பு துறைமுக முனையத்தின் அபிவிருத்தியை அதானி நிறுவனத்தின் ஊடாக மேற்கொண்டு வருவதோடு மன்னாரிலும், பூநகரியிலும் காற்றாலை மின்சாரத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அத்துடன் சீனாவினால் அமைக்கப்பட்ட மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்தை ரஷ்யாவுடன் இணைந்து அண்மையில் பொறுப்பேற்றது.

இலங்கையில் இந்திய நிறுவனங்களின் வருகைக்கு மேலதிகமாக, 2022 ஆம் ஆண்டில் புதுடெல்லி கொழும்புக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அவசரகால நிதியுதவியாக வழங்கியது.

இந்த நகர்வுகள் அண்டை நாடுகளில் பொருளாதாரம் மற்றும் வணிக நிறுவனத்தை அதிகரிப்பதற்கான இந்தியாவின் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அண்மைய ஆண்டுகளில், துறைமுக மேலாண்மை முதல் எண்ணெய் மற்றும் எரிவாயு வரையிலான துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம் சீனா, இலங்கையுடனான தனது பொருளாதார பங்காளித்துவத்தை ஆழப்படுத்தியுள்ளது.

சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு சீன அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதாக 2017 இல் இலங்கை அறிவித்தது.

நவம்பரில் சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக்கால் ஹம்பாந்தோட்டையை ஒட்டிய 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த கொழும்பு ஒப்புதல் அளித்தது.

இந்தநிலையில் கொழும்பை தளமாகக் கொண்ட சட்டத்தரணியும் வெளிநாட்டுக் கொள்கை ஆய்வாளருமான சரண கனங்கேகமகே, இந்திய நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பல ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், இலங்கை சீனாவுடனான தனது உறவை “மதிப்பிழப்பு” செய்யவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இலங்கை தமது பொருளாதாரக் கொள்கையின் முக்கியத் திட்டமாக, சீனா மற்றும் இந்தியாவை நம்பி, தமது பயன்படுத்தப்படாத அல்லது செயல்படாத சொத்துக்களை நிர்வகிப்பதன் மூலம் அதிகபட்ச பலன்களைப் பெறுவதை நோக்காகக் கொண்டுள்ளது என்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆய்வாளருமான சரண கனங்கேகமகே தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...