24 6625f58a4a593 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இராமாயண பாதைத் திட்டம் ஆரம்பம்!

Share

இலங்கையில் இராமாயண பாதைத் திட்டம் ஆரம்பம்!

இலங்கையில் இராமாயண பாதையின் வளர்ச்சிக்கு இந்தியா ஆதரவளிக்கும் வழிகள் குறித்து ஸ்ரீஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையின் உயர் அதிகாரிகளுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா விவாதித்துள்ளார்.

ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி மகராஜ் மற்றும் அவரது குழுவினரை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் சந்தோஸ் ஜா சந்தித்துள்ளார்.

சுவாமி கோவிந்த் தேவ் கிரி மஹாராஜால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கையில் இராமாயணப் பாதைத் திட்டத்தின் தொடக்க நிகழ்விலும் சந்தோஸ் ஜா பங்கேற்றார்.

ஸ்ரீஜென்மபூமி தீர்த்த க்சேத்ரா அறக்கட்டளையானது அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பொறுப்பில் உள்ள அமைப்பாகும்.

இந்த நிலையில் இராமாயணம் பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய சமஸ்கிருத இதிகாசங்களில் ஒன்றாகும்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...