Omalpe Sopita Thera
அரசியல்இலங்கைசெய்திகள்

சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும்!

Share

வயிற்றுக்கு உணவில்லாதபோது பாரிய நிதியை செலவிட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ள ஓமல்பே சோபித தேரர், சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திரத் தினக் கொண்டாட்டங்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ​தொடர்ந்து உரையாற்றிய அவர், என்னிடம் உடையில்லை என்பதற்காக வேறொருவரின் உடையை அணிந்துகொள்ள முடியுமா? எமது நாட்டு மக்களுக்கு உணவில்லை, வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை, கல்விக்கு தேவையான வளங்கள் இல்லை, உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குக் கூட மின்சாரத்தை வழங்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு வங்குரோத்தடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் அதிகளவான பணத்தை செலவிட்டு சுதந்திரத் தினத்தைக் கொண்டாட வேண்டுமா? இதற்கு பதிலாக நாட்டுக்கு தேவையான மருந்து பொருள்களைக் கொண்டுவாருங்கள், மக்களுக்கு உணவளியுங்கள், மாணவர்களுக்கு மின்சாரத்தை வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதன்கிழமைகளில் பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்: அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய மின்சக்தி மற்றும் எரிபொருள் சேமிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு புதன்கிழமையும்...

15 16
செய்திகள்உலகம்

இலங்கை கடற்பரப்பில் பலியான 84 ஈரானிய வீரர்கள்: தெஹ்ரானில் மாபெரும் இறுதிச் சடங்கிற்கு ஜனாதிபதி அழைப்பு!

இலங்கை கடற்பரப்புக்கு அப்பால் அமெரிக்க கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் இறுதிச்...

14 16
உலகம்செய்திகள்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் முதல் உத்தரவு: ஆட்சி அதிகாரத்தில் மாற்றமில்லை!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமேனி, தனது தந்தை அயத்துல்லா அலி கமேனியின்...

12 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதன்கிழமை விடுமுறை ஏன்? – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், நாளை...