Omalpe Sopita Thera
அரசியல்இலங்கைசெய்திகள்

சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும்!

Share

வயிற்றுக்கு உணவில்லாதபோது பாரிய நிதியை செலவிட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ள ஓமல்பே சோபித தேரர், சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திரத் தினக் கொண்டாட்டங்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தனவை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ​தொடர்ந்து உரையாற்றிய அவர், என்னிடம் உடையில்லை என்பதற்காக வேறொருவரின் உடையை அணிந்துகொள்ள முடியுமா? எமது நாட்டு மக்களுக்கு உணவில்லை, வைத்தியசாலையில் மருந்துகள் இல்லை, கல்விக்கு தேவையான வளங்கள் இல்லை, உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குக் கூட மின்சாரத்தை வழங்க முடியாத நிலையில் நாம் இருக்கிறோம். இதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு வங்குரோத்தடைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் அதிகளவான பணத்தை செலவிட்டு சுதந்திரத் தினத்தைக் கொண்டாட வேண்டுமா? இதற்கு பதிலாக நாட்டுக்கு தேவையான மருந்து பொருள்களைக் கொண்டுவாருங்கள், மக்களுக்கு உணவளியுங்கள், மாணவர்களுக்கு மின்சாரத்தை வழங்குங்கள் எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tamil News lrg 4098065
இந்தியாசெய்திகள்

விமானப் பணி விதிமுறைகள் சிக்கல்: இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு – பிப்ரவரி வரை தாமதம் நீடிக்க வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), டெல்லியிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் இரத்து...

1739443473 archuna
இலங்கைசெய்திகள்

சிங்களப் போர் வீரரால் காப்பாற்றப்பட்டேன்: இராமனாதன் அர்ச்சுனா – பாதுகாப்புப் படையினருக்கு அதிக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, வெள்ளத்தில் சிக்கியிருந்த தன்னைச் போர் வீரர்கள் காப்பாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

srilankaflood 532067014
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியேற்றம்: அரசாங்கம் கவனம்!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான...

1734575149 1
இலங்கைசெய்திகள்

சீனாவின் அவசர நிதியுதவிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி!

அண்மையில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இலங்கைக்குச் சீனா வழங்கிய நிதியுதவி மற்றும் தாராளமான ஆதரவிற்காகச்...