சடுதியாக அதிகரித்துள்ள இஞ்சியின் விலை
இலங்கைசெய்திகள்

சடுதியாக அதிகரித்துள்ள இஞ்சியின் விலை

Share

சடுதியாக அதிகரித்துள்ள இஞ்சியின் விலை

நாட்டில் இஞ்சியின் விலை அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி 1100 ரூபாய் முதல் 1200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் விலை 2400 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மக்கள் நாள்தோறும் உணவில் இஞ்சியை பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். தற்போது இஞ்சியை கொள்வனவு செய்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த ஆண்டு இஞ்சியின் விளைச்சல் பாரிய அளவில் குறைந்துள்ளமை காரணமாகவே இஞ்சியின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக மரக்கறி மற்றும் பழங்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.

அந்தவகையில், கொழும்புவில் உள்ள மக்கள் நெருக்கடியான சந்தையில் அதிக அளவிலான கடை உரிமையாளர்கள் காய்கறிகள், பழங்கள் என விற்பனை செய்கின்றனர்.

அதன் விலைவாசிகள் அதிகரித்துள்ளமை குறித்து பல கடை உரிமையாளர்கள் வெளிப்படையாக புகார் கூறி வருகின்றனர்.

மேலும் விலையைக் குறைக்கவும், குறைந்த அளவில் காய்கறி வாங்குவதைக் தவிர்க்கவும் நிறைய பேரம் பேசுவதாகக் கூறுகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....