வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்

Share

வீட்டை விட்டு வெளியேறிய யாழ். மருத்துவர்

பல தாக்குதல்களுக்குப் பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய யாழ்ப்பாண மருத்துவர் குறித்த தகவல்களை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு பொருளாதார நெருக்கடியே காரணம் என்றாலும், பொலிஸார் இந்த விடயத்தை குறைத்து மதிப்பிடுகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அத்துடன் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் தேவையற்ற செய்திகளை வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு வைத்தியரின் குடும்பம் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சாவியை ஒப்படைத்த பின்னர் இந்த வாரம் வாடகை வீட்டை காலி செய்யும் நிலைக்கு நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை எட்டியுள்ளது.

இந்த வீடு மருத்துவ நிபுணரின் குடும்பத்திற்கு நீண்ட கால குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் ஆயுதமேந்திய சிலரால், சொத்துக்களும் வாகனங்களும் பலமுறை சேதப்படுத்தப்பட்டன.

வீட்டின் உரிமையாளருக்கும் மற்றுமொருவருக்கும் இடையிலான குரோதமே இந்த தாக்குதல்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அத்துடன் வீட்டு உரிமையாளர் மரணமான நிலையில் அதற்கான உரிமைக் கோரலும் தீவிரமான நிலையிலேயே தாக்குதல்களும் அதிகரிக்கப்பட்டன.

எனினும் பல முறை முறைப்பாடு அளித்தும் பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் உரிமையாளரின் குடும்பம் பிரதேச செயலாளரிடம் சாவியை ஒப்படைக்க முடிவு செய்தது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்ததால், அவர்கள் அதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல்: 7 பேர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதி; ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

பேருவலை கல்வி வலயத்திற்குட்பட்ட வலதர மகா வித்தியாலயம் மற்றும் அளுத்கம பாதாகொட மகா வித்தியாலய மாணவர்களுக்கு...

MediaFile 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பணச் சுத்திகரிப்பு விவகாரம்: கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பிணையில் விடுதலை!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய...

25 692fe7590b779
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து ரூ. 192 கோடி ஒதுக்கீடு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால்...

2A6EAC25 75B8 4FA0 81ED 11E36EED99DE
செய்திகள்இலங்கை

தேர்தலைத் தாமதப்படுத்த அரசாங்கம் சதி – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் கடும் சாடல்!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாகப் பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு, அரசாங்கம் தனது தரப்புப்...