இந்தியா
யாழ்ப்பாணம் -தமிழகம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்
யாழ்ப்பாணம் -தமிழகம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இந்தியத் துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கேசன்துறை – காரைக்கால் இடையே கப்பல் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தது.
எனினும் தற்போது காங்கேசன்துறை – நாகப்பட்டினம் என்ற அடிப்படையில் பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் பயணிகள் முனையம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வடக்கு மாகாணத்திற்கான தூரம் 110 கிலோமீட்டர்களாகும்.
எனவே நாகப்பட்டினத்தில் இருந்து கப்பலில் சென்றால் வெறும் 4 மணிநேரத்தில் காங்கேசன்துறையை அடைந்துவிடலாம் என கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: வடக்கில் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர் கைது - tamilnaadi.com
Pingback: நல்லூர் திருவிழா சனநெரிசலில் சிக்கி சிலர் மயக்க நிலை - tamilnaadi.com
Pingback: யாழில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு - tamilnaadi.com
Pingback: ஜனாதிபதி மாளிகையை அனுமதி இல்லாமல் எவ்வாறு தனியாருக்கு வழங்க முடியும் - tamilnaadi.com
Pingback: நரேந்திர மோடியின் நல்லூர் கோவிலுக்கான விஜயம் தொடர்பில் தகவல் - tamilnaadi.com
Pingback: தையிட்டியில் மீண்டும் ஆரம்பமான போராட்டம் - tamilnaadi.com
Pingback: கொழும்பில் வாகனத்தை தாடியால் இழுத்து உலக சாதனை படைத்த முதியவர் - tamilnaadi.com