24 660624edce6b9
இலங்கைசெய்திகள்

பண்டிகை காலத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

பண்டிகை காலத்தில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பண்டிகைக் காலங்களில் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை சோதனையிட தொடங்கவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடைகளை பரிசோதிப்பதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது தயாரிக்கப்பட்ட பல உணவு மாதிரிகள் சுவை பரிசோதகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டிகை காலத்தில் உணவு தயாரிக்கும் நபர்களின் மருத்துவ சான்றுகளை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை,பண்டிகைக் காலத்திற்காக உற்பத்தி செய்யப்படும் பல்வேறு உணவுப் பொருட்களை பரிசோதகர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,பொது மக்கள் உணவுப்பொருட்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...