தடுப்பூசி அட்டைப் பயன்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு!

Vaccine Card

கொவிட்-19 தடுப்பூசி அட்டைகளைப் பொது இடங்களுக்குப் பயணிப்போர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பான சட்ட தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இரண்டாவது தடுப்பூசியை செலுத்திய பின்னர், முதல் 3 மாதங்களில் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த தடுப்பூசி செலுத்தல் மூலம் பல்வேறுப்பட்ட நோய் அறிகுறிகள் ஏற்படுவதாக வெளியான தகவல் இதுவரை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version