” நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தீரும்வரை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கமாட்டேன்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
” எனக்கு ஆங்கிலம் தெரியாது. நாட்டை நிர்வகிக்கவும் முடியாது. எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமை தீரும்வரை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கமாட்டேன். மூன்று மாதங்கள் சபைக்கு வராமல் இருக்க முடியாது. அது பற்றி உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றேன். பிரச்சினை தீர்ந்த பிறகு வருகின்றேன்.
மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், தங்காலையில் உள்ள அவரின் வீட்டை தேடி மக்கள் சென்றனர். இன்று வெளியேறுமாறு கோருகின்றனர். எனவே, மக்களின் மனநிலையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றும் சாமர சம்பத் தஸநாயக்க குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment