அரசியல்இலங்கைசெய்திகள்

நல்லாட்சியில் நான் துப்பாக்கிகளால் பதிலளிக்கவில்லை! – மைத்திரி கடும் கண்டனம்

மைத்திரிபால சிறிசேன
Share

“எனது தலைமையிலான நல்லாட்சி அரசின் காலத்தில் எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை. அதேநேரம் போராட்டக்காரர்களுக்குத் துப்பாக்கிகளால் பதிலளிக்கவும் இல்லை.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ரம்புக்கனை போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் நால்வர் கொல்லப்பட்டதுடன் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“2015ஆம் ஆண்டு நான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது முதல் எனது பதவிக்காலம் முடிவடையும் வரையில் எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு நான் அனுமதிக்கவில்லை. அதேபோன்று போராட்டக்காரர்களுக்கு துப்பாக்கியால் பதிலளிக்கவும் முற்படவில்லை.

நிராயுதபாணிகளுக்குத் தோட்டாக்களை நான் பரிசளிக்கவும் இல்லை. ஆகவே, ரம்புக்கனையில் இன்று இடம்பெற்ற சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...