Lohan Ratwatte Y78678
இலங்கைசெய்திகள்

கைதிகளை அச்சுறுத்த எனக்கு பைத்தியமில்லை -லொஹான் பல்டி

Share

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டினேன் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அடியோடு மறுக்கிறேன் என சிறைச்சாலை மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

சிறைகளில் நடைபெறுகின்ற குற்றங்களை நான் தடுப்பதனால் இது போன்ற குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துகின்றனர்.

எனினும் நான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நேரில் சென்று எனது விளக்கத்தை அளிக்கவுள்ளேன்.

அந்த சிறையில் உள்ள கைதிகளை அச்சுறுத்தவில்லை. அங்கு கண்காணிப்பு விஜயத்தையே மேற்கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் என்ற அடிப்படையில் என்னால் எவ்வேளையிலும் சிறைகளுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொள்ள முடியும்.  அதற்கு எவருடைய அனுமதியும் எனக்குத் தேவையில்லை. எனது பொறுப்பில் 29 சிறைச்சாலைகளும் இரண்டு மறுவாழ்வு நிலையங்களும் உள்ளன. நான் இரவு பகல் என எந்தச் சந்தர்ப்பத்திலும் அங்கு சென்று நிலைமைகளை கண்காணிக்க முடியும்.

சிறைகளுள் என்ன நடைபெறுகின்றன என்பதை கண்காணிக்க திடீரென விஜயம் செல்வேன்.
அத்துடன் எந்தக் கைதிகளையும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மண்டியிட வைத்து கொலை அச்சுறுத்தல் விடுக்கவில்லை. அவ்வாறு செய்ய எனக்கு பைத்தியமில்லை.

நான் ஒரு பெண்ணுடன் வெலிக்கட சிறைக்கு சென்றேன் எனக் கூறப்படும் கதைகள் போலியானவை. இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெளிவுபடுத்துவேன்’’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...