image 188
இலங்கைசெய்திகள்

பொல்லால் அடித்து கணவர் கொலை! – அவிசாவளையில் பயங்கரம்

Share

அவிசாவளை பகுதியில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை –தைகல பகுதியில் நேற்று இரவு இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மதுபோதையில் வருகை தந்த கணவர் நேற்றிரவு மனைவியை தாக்கியுள்ளார். இதனால் மனைவி கணவரை பொல்லால் தாக்கியுள்ளார். இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது

இதனையடுத்து மனைவி 8 வயதான மகளை மாமியார் வீட்டில் ஒப்படைத்து விட்டு பொலிஸ் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

இளைஞனின் சடலம் அவிசாவளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கான ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...