நாட்டில் அந்நியச் செலாவணியில் மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிவரும் நிலையில், இவ் ஆண்டின் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு பணியாளர்கள் மூலமாக இலங்கைக்கு அனுப்பிய அந்நிய செலாவணி 51.6 சதவீத வீழ்ச்சியாக கணக்கிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பணியாளர்கள் மூலமாக கடந்த மாதத்தில் அனுப்பப்பட்ட அந்நிய செலவாணி 274.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது. இது 2021 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், 478.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு வாழ் இலங்கையர்களினால் பணம் அனுப்பும் நடவடிக்கை ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியனில் டொலரிலிருந்து மே மாதத்தில் 304 மில்லியனாக டொலர்களாக அதிகரித்தது.
ஆனால் ஜுன் மாதத்தில் மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவதை குறைத்துள்ளதாக மத்தியவங்கி தெரிவிக்கின்றது.
#SriLankaNews
Leave a comment