தென்னிலங்கையில் வைத்தியசாலைக்கு வந்தவர்களால் பதற்ற நிலை
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் வைத்தியசாலைக்கு வந்தவர்களால் பதற்ற நிலை

Share

தென்னிலங்கையில் வைத்தியசாலைக்கு வந்தவர்களால் பதற்ற நிலை

களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று பிற்பகல் நோயாளர்களைப் பார்க்க வந்த நோயாளிகள் குழுவிற்கும் தனியார் மருத்துவமனை பாதுகாப்புப் பணியாளர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நோயாளர்களைப் பார்க்க வந்த நபர் ஒருவரும், தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் உடல்நிலையைப் பார்ப்பதற்காக சுமார் 5 பேர் வந்திருந்ததாகவும், அவர்கள் வைத்தியசாலை வளாகத்துக்குள் செல்வது தொடர்பான கருத்த மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நோயாளி ஒருவரைப் பார்க்க வந்த ஒருவரிடமிருந்து அனுமதிப் பத்திரத்தை பாதுகாப்பு உத்தியோகத்தர் பறித்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில், கிட்டத்தட்ட 15 பேர் அடிதடியில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடத்திய இருவரும் நாகொட பொது வைத்தியசாலையின் ஒரே பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலில் மேலும் பலர் லேசான காயம் அடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை மேலும் நாகொட பொது வைத்தியசாலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 67874f1d5d009
செய்திகள்இலங்கை

தெளிவற்ற மருந்துச் சீட்டுகள் ஆபத்து: வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் – மருத்துவர்களுக்கு இலங்கை மருத்துவ சபை எச்சரிக்கை!

மருந்துச் சீட்டுகளை எழுதுவது மற்றும் பரிந்துரைப்பது தொடர்பான அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவ நிபுணர்களை வலியுறுத்தி...

images 7 3
செய்திகள்இலங்கை

பேருந்து கட்டணம் செலுத்த புதிய வசதி: வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம் – அமைச்சர் அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி முதல் வங்கி அட்டைகள் (Bank Cards) மூலம் பேருந்து கட்டணங்களைச்...

images 6 3
உலகம்செய்திகள்

உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட காஸா சிறுமி: சவக்கிடங்கில் 8 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு, சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12 வயதுச்...