ஊரடங்கு வேளையில் சுகாதார விதிமுறைகளை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட மேலும் 25 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா – நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்ட 13 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளை பேணிய 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனை முடிவுகள் வெளியான நிலையில் மேலும் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தக் கிராமத்தில் சுமார் 100 பேர் வரையில் வசித்துவரும் நிலையில் மொத்தமாக 38 பேர் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர். இதனால் குறித்த கிராமம் அச்சுறுத்தல் மிக்கதாக மாறியுள்ளது. சுகாதார நடைமுறைகளை அவதானமான பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.