sajith 5
அரசியல்இலங்கைசெய்திகள்

ஹரீன், மனுஷவின் செயல் அருவருக்கத்தக்கது! – சஜித் சீற்றம்

Share

“எமது கட்சியின் தீர்மானத்தை மீறி அரசு பக்கம் சாய்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களின் இந்தச் செயற்பாடு மிகவும் அருவருக்கத்தக்கது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் நல்ல கருமங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கும் எனவும், அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை எனவும் நாம் ஏற்கனவே முடிவெடுத்திருந்தோம். இந்நிலையில், ஹரீன் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் எமது கட்சியின் முடிவை மீறிச் செயற்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

எமது கட்சியிலிருந்து உறுப்பினர்களை அரசு பக்கம் எடுத்தால் எமது ஆதரவை வாபஸ் பெறுவோம் எனவும் நாம் ஏற்கனவே தீர்மானித்திருந்தோம். இந்நிலையில், ஹரீனுக்கும், மனுஷவுக்கும் அமைச்சுப் பதவிகளை அரசு வழங்கியுள்ளதால் அரசுக்கான எமது ஆதரவு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூடி பரிசீலிக்கும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...