EGG 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முட்டைக்கு பெரும் தட்டுப்பாடு!

Share

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையில் முட்டைகளை விற்பனைச் செய்ய முடியாமையால், ஹட்டன் நகரிலுள்ள முட்டை வியாபாரிகள் பலர், முட்டைகளை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால் நகரில் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

சில கடைகளில் முட்​டையொன்று 55 ரூபாய் முதல் 57 ரூபாய் வரைக்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது. எனினும், சில முட்டைக்கடைகளில் முட்டையொன்று 50 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. எனினும், அவ்வாறான கடைகளில் முட்டை விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

எனினும், முட்டையின் மொத்த விலை 52 ரூபாய் முதல் 54 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையினால் முட்டைகளை விற்பனைச் செய்ய முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என முட்டை வர்த்தகத்தில் ஈடுபடு​வோர் தெரிவித்தனர்.

முட்டை வர்த்தகத்தை மட்டுமே செய்யாமல், இதர சில்லறை பொருட்களையும் விற்பனைச் செய்யும் வர்த்தகர்கள், ஏனைய பொருட்களை விற்க வேண்டும் என்பதற்காக, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் முட்டையை விற்பனைச் செய்கின்றனர் என்றும் முட்டை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...