24 66416bea463cf
இலங்கைசெய்திகள்

அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டல் வழங்க முயற்சி

Share

அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டல் வழங்க முயற்சி

அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கையூட்டல் வழங்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

மதுபான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பணம் என்பனவற்றை வழங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியின் பக்கம் இணைத்துக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் தமது அணியிலிருந்து எவரும் பணத்திற்கோ மதுபான அனுமதிப் பத்திரத்திற்கோ விலை போக மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொனராகல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது சஜித் பிரேமதாச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...