3 14
இலங்கைசெய்திகள்

நெல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு புதிய சிக்கல்

Share

நெல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு புதிய சிக்கல்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ள போதிலும் நேற்று(07.02.2025) வரை விவசாயிகளால் நெல் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் குறைந்த உத்தரவாத விலை மற்றும் போக்குவரத்துச் செலவுகள் போன்ற காரணங்களால் விவசாயிகள் அறுவடையை நிறுத்தியதே இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.

அத்துடன், தனியார் அரிசி ஆலைகள் அரசாங்கத்தின் உத்தரவாத விலையை விட அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவிப்பதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை(05.02.2025) அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை அறிவித்திருந்தது

இதற்கமைய, நாட்டு நெல்லை 120 ரூபாவிற்கும் சம்பா நெல்லை 125 ரூபாவிற்கும் கீரி சம்பா நெல்லை 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...