WhatsApp Image 2022 04 04 at 4.35.22 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய உடனடியாக பதவி விலக வேண்டும்! – அநுரகுமார வலியுறுத்து

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டு மக்கள் கொந்தளித்துள்ள நிலையில், அதனை சமாளிப்பதற்காக இராஜினாமா என்ற நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. இது மக்களுக்கும் தெரியும்.

கோட்டா அரசால் முன்வைக்கப்படும் இடைக்கால அரசு, இடைக்கால சர்வக்கட்சி அரசு என்பவற்றை ஏற்பதற்கு எமது கட்சி தயார் இல்லை. கோட்டாபய ராஜபகசவும், அரசும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அதனை இந்த அரசு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்த பின்னர் அடுத்தக்கட்டம் பற்றி தீர்மானம் எடுக்கலாம். அதற்கான உரிய திட்டம் எம்மிடம் உள்ளது.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...

Pillayan
இலங்கை

இன்றைய தினம் பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...