gotta
இலங்கைசெய்திகள்

அமெரிக்கா புறப்பட்டார் கோத்தாபய!

Share

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அக் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று அதிகாலை நியூயோர்க் புறப்பட்டுள்ளார்.

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றகர நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

மேலும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை தொற்றிலிருந்து மீட்டெடுப்பது மற்றும் பொருளாதார மற்றும் சமூக ரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

அத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...