இலங்கைசெய்திகள்

அமெரிக்கா புறப்பட்டார் கோத்தாபய!

Share
gotta
Share

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அக் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று அதிகாலை நியூயோர்க் புறப்பட்டுள்ளார்.

இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றகர நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

மேலும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை தொற்றிலிருந்து மீட்டெடுப்பது மற்றும் பொருளாதார மற்றும் சமூக ரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

அத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...