gota mahinda
அரசியல்இலங்கைசெய்திகள்

முடிவு ஜனாதிபதியிடம்; எதற்கும் பிரதமர் தயார்! – கோட்டாவுக்கு மஹிந்தர் செய்தி

Share

“பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி என்ற முறையில் உங்களுக்கு உசிதமானது என நீங்கள் கருதும் எந்தத் தீர்மானத்தையும் எடுங்கள். அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார்” என தம்பியார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குத் தமையனார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்தார் என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதன்போதே பிரதமர் மேற்படி விடயத்தை ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தினார் எனப் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.

சர்வகட்சி இடைக்கால அரசை நியமிப்பதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இராஜிநாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் யோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பெளத்த பிக்குகளின் சங்க சபா நேற்று கொழும்பில் வைத்து கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

அதையடுத்தே இந்தத் தகவலை ஜனாதிபதிக்குப் பிரதமர் தெரிவித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

– ‘காலைக்கதிர்’ (01.05.2022 – மாலைப் பதிப்பு)

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...