image 2cc098f0b2
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

கோபால் பாக்லே – தேரர்கள் சந்திப்பு

Share

இந்திய – இலங்கை மக்களின் நலனுக்காகவும் அவர்களிடையிலான சகோதரத்துவ உறவுக்காகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களிடம் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆசி பெற்றிருந்தார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதுடெல்லியில் ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெற்ற 2023 உலக பௌத்த மாநாட்டின் ஆரம்ப உரையில் பிரதமர் நரேந்திர மோடி, சுட்டிக்காட்டிய புத்தபெருமானின் போதனைகளுக்கு அமைவாக, அனைவரினதும் நலன்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பாராட்டிய சங்கைக்குரிய இரு சிரேஸ்ட தேரர்களுக்கும் உயர் ஸ்தானிகர் நன்றியினைத் தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளினதும் மக்களுக்காக கலாசாரத்துறைசார் மேலதிக ஒத்துழைப்பு மற்றும் மேம்பட்ட தொடர்புகள் மூலமான நன்மைகள் குறித்தும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

image 9ff595f404 image 21ef981081 1

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...