4 26
இலங்கைசெய்திகள்

சிரேஷ்ட பிரஜைகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

Share

சிரேஷ்ட பிரஜைகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சு அதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று (17.12.2024) உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பு வட்டி குறைப்பு தொடர்பில் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு கயந்த கருணாதிலக்க கூறுகையில், தேசிய மக்கள் சக்தி, வளமான நாடு, அழகிய வாழ்வு என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில், மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகை வட்டி வீதம் சாதாரண வட்டி வீதத்தை விட ஐந்து வீதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டியை அதிகரிப்பது தொடர்பில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபையின் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...

sl pass port
இலங்கை

போலியான கடவுச்சீட்டு – பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்றைய தினம் நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது, முன்னாள் நாடாளுமன்ற...