இனப்படுகொலையாளிகள் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது! – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்

1726679 ramadoss

இனப்படுகொலையாளிகள் தப்பிச் செல்ல அனுமதிக்கக்கூடாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில்,

இலங்கையை திவாலாக்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியுள்ளனர். மக்கள் சக்திக்கும், ஆத்திரத்திற்கும் அஞ்சி அதிபர் கோத்தபய தப்பியோடியுள்ளார்.

இலங்கையில் ஊழலில் திளைத்த ராஜபக்ச குடும்பம் அதை மறைக்க தமிழர்களை இனப்படுகொலை செய்தது. அதற்காக கடன் வாங்கியது. இனப்படுகொலைக்கு உதவிய நாடுகள் இலங்கையை கொள்ளையடிக்க அனுமதித்தது. இவை தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்.

அந்த வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை ஈழத்தமிழர் இனப்படுகொலையிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. எந்த சிங்கள மக்களை வெறியேற்றி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தமிழர்களை கொன்றார்களோ, அந்த சிங்கள மக்களாலேயே ராஜபக்சே குடும்பம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியிருக்கிறது. ராஜபக்சக்கள் அதிகாரத்திலிருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளனர். இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படவில்லை. இனப்படுகொலையாளிகள் தப்பிக்க உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது – எனத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews #India

Exit mobile version