tamilni 215 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் நோயாளர் காவு வண்டியில் சென்று உயர்தர பரீட்சை எழுதிய மாணவி

Share

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவி ஒருவர் அவசர நோயாளர் காவு வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு பரீட்சையில் தோற்றியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த மாணவி இன்றையதினம் பரீட்சைக்கு தோற்ற வேண்டியிருந்தது.

எனினும் உடல்நிலையில் முன்னேற்ற மேற்படாத காரணத்தினால் மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு மருத்துவமனை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவி குறுகிய நேரவிடுப்பு அடிப்படையில் மருத்துவமனையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலமாக பரீட்சை நிலையத்துக்கு காலை அழைத்து செல்லப்பட்டு மருத்துவ தாதியின் கண்காணிப்பில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...