Mannar gas 02
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிவாயு அடுப்பு வெடிப்பு: கூலித்தொழிலாளியின் வீடு சாம்பலானது!

Share

எரிவாயு அடுப்பு வெடித்த நிலையில், பெண் கூலித் தொழிலாளியின் வீடு எரிந்து சாம்பலான சம்பவம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில், இன்று (06) மதியம், எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

தரவான் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டில், எரிவாயு அடுப்பு வெடித்தமையைத் தொடர்ந்து குறித்த பெண், அதிர்சியின் காரணமாக மயக்கம் அடைந்த நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Mannar gas 01

இதேவேளை குறித்த பெண், வீட்டில் தனிமையில் வசிப்பதுடன், பனம் பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Mannar gas

தற்போது வீடு முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது. மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று, மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...