நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள, எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக சுமார் 12 ஆயிரம் ஹோட்டல்கள், அரச மற்றும் தனியார் உணவகங்கள் மற்றும் பேக் கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக, சுமார் 4 ஆயிரம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
உணவகங்களைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் சுமார் 7 ஆயிரம் வெதுப்பகங்கள் இருக்கும் நிலையில், அவற்றில், சுமார் 3 ஆயிரத்து 500 வெதுப்பகங்கள், எரிவாயு மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன.
அதனால், நிவாரணம் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் ஏனைய வெதுப்பகங்களும் மூடப்படலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews