Hotel
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

எரிவாயுத் தட்டுப்பாடு: இழுத்து மூடப்பட்ட 12 ஆயிரம் ஹோட்டல்கள்!!

Share

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள, எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக சுமார் 12 ஆயிரம் ஹோட்டல்கள், அரச மற்றும் தனியார் உணவகங்கள் மற்றும் பேக் கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், எரிவாயுத் தட்டுப்பாடு காரணமாக, சுமார் 4 ஆயிரம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையான சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

உணவகங்களைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுமார் 7 ஆயிரம் வெதுப்பகங்கள் இருக்கும் நிலையில், அவற்றில், சுமார் 3 ஆயிரத்து 500 வெதுப்பகங்கள், எரிவாயு மற்றும் மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன.

அதனால், நிவாரணம் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் ஏனைய வெதுப்பகங்களும் மூடப்படலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....