Litro Gas Lanka
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

லொறியிலிருந்து எரிவாயு சிலிண்டர்கள் களவு! – கொழும்பில் பரபரப்பு

Share

கொழும்பு, ஆமர்வீதி பகுதிக்கு சமையல் எரிவாயு ஏற்றிவந்த லொறிலிருந்து சுமார் 100 ‘கேஸ் சிலிண்டர்’கள் களவாடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளும் இடம்பெறுகின்றன.

தமக்கு சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஆமர்வீதி பகுதி மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில் அப்பகுதிக்கு சமையல் எரிவாயுவை விநியோகிக்க வந்த லொறிக்குள் ஏறிய சிலர், சிலிண்டர்களை எடுத்துச்சென்றுள்ளனர். சுமார் 100 சிலிண்டர்கள்வரை களவாடப்பட்டுள்ளன என்று லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சந்தைக்கு விநியோகிப்பதற்கு போதுமானளவு எரிபொருள் கைவசம் இல்லை எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே விநியோகிக்கப்படும் என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...