1 6
அரசியல்இலங்கைசெய்திகள்

காலிமுகத்திடலில் 9ஆவது நாளாகத் தொடரும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம்

Share

“கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 9ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச உள்ளடங்கலாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ராஜபக்‌ச குடும்ப உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் போராட்டம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகின்றது,

இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று ஜனநாயகத்துக்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ். பண்ணைக் கடற்கரையில் இன்று மாலை 6.30 மணியளவில் இந்தத் தீப்பந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...

anura kumara
இலங்கை

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு – மூடப்பட போகும் பல அரச நிறுவனங்கள்!

பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடும்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த...

ranjan ramanayake d
இலங்கை

நானும் சிறையில் இருந்தவன் என்ற அடிப்படியில் சொல்கிறேன் – ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து.

  நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சிறைச்சாலைகளில் ஏற்படும்...

Accident
இலங்கை

இளைஞரின் உயிர் பறித்த விபத்து – தப்பி சென்ற சாரதி கைது.

  சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். வாகன விபத்தை...