11 17
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு

Share

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் எமது ஊடகப்பிரிவு இலங்கை பெட்ரோலி கூட்டுதாபனத்திடம் உயர் அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு கேட்ட போது, விலை திறுத்தம் தொடர்பில் இது வரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் உண்மைத்தன்மை தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் பிரகாரம், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் திருத்தப்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாத காரணத்தினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.

இந்நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தியதன் காரணமாகவே விலை திருத்தம் தொடர்பில் மேற்படி தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில், ஜூலை 1 ஆம் திகதி வரை 82.38 டொலராக பதிவு செய்யப்பட்ட W.T.I. கச்சா எண்ளை நேற்று 75.30 டொலராக குறைந்துள்ளது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...