unOpZTSGwKoXOYeyvTrS 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு இலவச யூரியா!

Share

விவசாய குடும்பங்களுக்கு தலா 50 கிலோ யூரியா உர மூட்டைகளை வழங்க உள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (UNFAO) இணைந்து யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை அமைச்சிடம் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்றைய தினம் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே விவசாய அமைச்சர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்து இந்த வருடம் விவசாயிகளுக்கு மானியமாக 15,000 மில்லியன் ரூபா பெறுமதியான யூரியா உரம் மற்றும் விவசாய உபகரணங்களை விவசாய அமைச்சுக்கு வழங்கியுள்ளன.

இது ஏழு மாவட்டங்களில் உள்ள 71,000 விவசாய குடும்பங்களுக்கு இந்த இலவச யூரியா உரம் வழங்கப்படவுள்ளது.

இவை பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் ½ ஹெக்டேயருக்கும் குறைவான நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, அதிக விளைச்சலைப் பெற புதிய செய்கை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாராசூட் நெல் செய்கை முறையை ஊக்குவிப்பதற்கு, விவசாயிகளுக்கு உயர்தர விதைகளை வழங்கத் தேவையான ஆதரவையும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 176
செய்திகள்உலகம்

உலகளாவிய பொருளாதார நெருக்கடி: 80 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டத்தை அறிவித்தார் அஜய் பங்கா!

நீடித்த உலகளாவிய பொருளாதார இடையூறுகள் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளைச் சமாளிக்க நாடுகளுக்கு உதவும் நோக்கில்,...

world 175
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்தியாவிலிருந்து 36,700 மெட்ரிக் டன் பெட்ரோல் வருகை: விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையின் உள்ளூர் எரிபொருள் விநியோகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 36,700 மெட்ரிக் டன் ஆக்டேன் 92...

world 174
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளைக் குறைக்கிறது சர்வதேச நாணய நிதியம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தின் வேகத்தைத் திடீரெனச் சீர்குலைத்துள்ளதால், வளர்ச்சி கணிப்புகளைக்...

world 173
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வேசும முதற்கட்ட பயனாளர்களுக்கு கொடுப்பனவு: மோசடியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!

அஸ்வேசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்ட பயனாளர்களுக்கான விபரங்களை மீளாய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும்...