இலங்கை செல்லும் தனது நாட்டு பிரஜைகளுக்கு பிரான்ஸ் வழங்கிய பயண ஆலோசனையில் பிரான்ஸ் அரசாங்கம் தளர்வுகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கைக்கு பயணம் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு பரிந்துரைத்துள்ள பிரான்ஸ் அரசாங்கம், இலங்கையின் சமீபத்திய வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கான எரிபொருளை விநியோகிப்பதில் நாடு தற்போது சிறந்த இடத்தில் இருப்பதாகவும், உள்நாட்டுப் பயணத்திற்காக உள்ளூர் பயண முகவர்களுடன் திட்டங்களை மேற்கொள்ளுமாறும் பிரான்ஸ் வலியுறுத்தியது.
#SriLankaNews
Leave a comment