11 39
இலங்கைசெய்திகள்

அநுர மிதிபலகையிலா பயணம் செய்தார்: கேள்வி எழுப்பிய திலித் ஜெயவீர

Share

நாடாளுமன்றத்தில் இன்று (27) வெளியிடப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணச் செலவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர (Dilith Jayaweera) சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்.

அத்துடன் அந்த புள்ளிவிபரங்கள் நடைமுறைக்கு மாறானவை என்றும் அவர் கூறியுள்ளார் .

ஜனாதிபதிகளின் வெளிநாட்டு செலவீனங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், ஜனாதிபதி பயணச் செலவுகளில் கூர்மையான வீழ்ச்சியைக் காட்டும் வகையில், ஜனாதிபதி அநுர வெறும் 1.8 மில்லியன் ரூபாயில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு பயணம் செய்ய முடிந்தது என்று வினவினார்.

வெளிநாட்டு பயணச் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறுகிறார். இவ்வளவு குறைந்த தொகையுடன் மூன்று நாடுகளுக்கு அவர் எப்படி பயணம் செய்தார் என்று தமக்கு தெரியவில்லை.

அவர் மிதி பலகையில் பயணம் செய்தாலும் கூட, இந்த குறைந்த செலவில் அவரால் பயணம் மேற்கொண்டிருக்க முடியாது என திலித் ஜெயவீர குறிப்பிட்டார்.

கடந்த ஐந்து மாதங்களாக பதவியில் இருக்கும், ​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தார்.

இந்த நிலையில் செலவுகளைக் குறைப்பது மட்டும் இலாபத்தை ஈட்டாது என்று குறிப்பிட்ட ஜெயவீர, வருமானம் ஈட்டுவதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

பாதீட்டு பற்றாக்குறையை எவ்வாறு சமன் செய்வது, நமது கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவோம் என்பன தொடர்பில் கேள்வி எழுப்பிய அவர், நாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டார்.

Share

Recent Posts

தொடர்புடையது
4680497 2145223106
செய்திகள்உலகம்

கொங்கோவில் பயங்கரம்: சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – உலகளாவிய கோல்டன் உற்பத்தியில் பாதிப்பு!

கிழக்கு கொங்கோவில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற ருபாயா (Rubaya) சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்ட...

230413 Sri Lanka PTA 32JX8B7 highres
செய்திகள்அரசியல்இலங்கை

PTA மற்றும் PSTA சட்டங்களை உடனடியாக மீளப் பெறு! – நீதி அமைச்சிற்கு முன்பாக சிவில் அமைப்புகள் பாரிய போராட்டம்.

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA)...

President Anura Kumara Dissanayake Central Bank Meeting 1024x786 1 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் ஜனாதிபதி எதிர்வரும் 3ஆம் திகதி பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி...

26 697ca2dd2f039
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: ஜனாதிபதியின் 5-ஆவது பரிந்துரையை இன்று பரிசீலிக்கிறது அரசியலமைப்பு சபை!

இலங்கையின் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) பதவி கடந்த பத்து மாதங்களாக வெற்றிடமாக உள்ள நிலையில்,...