26 697ca2dd2f039
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: ஜனாதிபதியின் 5-ஆவது பரிந்துரையை இன்று பரிசீலிக்கிறது அரசியலமைப்பு சபை!

Share

இலங்கையின் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) பதவி கடந்த பத்து மாதங்களாக வெற்றிடமாக உள்ள நிலையில், அந்தப் பதவிக்குத் திறந்த பல்கலைக்கழகத்தின் நிதி இயக்குநர் டபிள்யூ.எம்.கே.ஜி. விக்ரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பரிந்துரை செய்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தப் பரிந்துரையை ஆராய்வதற்காகச் சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை நேற்று (30) பாராளுமன்ற வளாகத்தில் கூடியது. எனினும், இதன்போது இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், குறித்த பெயரை மீண்டும் பரிசீலிக்க அரசியலமைப்பு சபை இன்று (31) மீண்டும் கூடவுள்ளது.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன ஏப்ரல் 2025 இல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்தப் பதவி காலியாகியது.

இதற்கு முன்னர் ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட நான்கு பெயர்களையும் அரசியலமைப்பு சபை நிராகரித்திருந்தது. இது ஜனாதிபதி முன்மொழியும் ஐந்தாவது பெயராகும்.

தர்மபால கம்மன்பில பதில் கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றினார். எனினும், ஒரு பதில் பதவியை இரண்டு முறைக்கு மேல் நீடிக்க முடியாது என்ற சட்ட விதியின் காரணமாக, அவரது சேவை நீட்டிப்புக்குச் சபை அனுமதி வழங்கவில்லை. இதனால் டிசம்பர் 06 முதல் பதில் பதவியும் காலாவதியாகியுள்ளது.

ஜனாதிபதியால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள விக்ரமசிங்க, களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். தற்போது திறந்த பல்கலைக்கழகத்தின் நிதி இயக்குநராகப் பணியாற்றி வரும் இவரை, அரசியலமைப்பு சபை ஏற்குமா என்பது இன்றைய கூட்டத்தில் தெரியவரும்.

கணக்காய்வாளர் நாயகம் போன்ற முக்கிய அரசியலமைப்புப் பதவி நீண்டகாலமாக வெற்றிடமாக இருப்பது, அரச நிறுவனங்களின் நிதி மேலாண்மை மற்றும் கணக்காய்வுப் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...