President Anura Kumara Dissanayake Central Bank Meeting 1024x786 1 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் ஜனாதிபதி எதிர்வரும் 3ஆம் திகதி பேச்சுவார்த்தை!

Share

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (பெப்ரவரி 03) மாலை 6 மணிக்கு இந்த விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் இந்தப் தீர்மானம் குறித்து, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே நேற்று (30) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேரில் சென்று அறிவித்தார்.

பாடசாலைகளில் பயிற்சி பெற்று வரும் இந்தப் பட்டதாரிகள், நீண்டகாலமாக நிலவும் தமது கோரிக்கையான ‘சேவையை நிரந்தரமாக்குதல்’ என்பதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகளுடன் முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஜனாதிபதியே நேரடியாகப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளமை போராட்டக்காரர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...