24 66c04c4f37a1b
இலங்கைசெய்திகள்

நாட்டின் மூன்று பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வௌ்ள அபாய எச்சரிக்கை..!

Share

நாட்டின் மூன்று பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வௌ்ள அபாய எச்சரிக்கை..!

களுகங்கையின் கிளை கங்கையான குடா கங்கையின் மேல் பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடுத்த 48 மணித்தியாலங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புலத்சிங்கள – மொல்காவ வீதியின் தம்பலா மற்றும் நாலியத்த ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மத்துகம, பதுரலிய மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு கடந்த 24 மணித்தியாலங்களில் எஹலியகொடவில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது,

மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு குடியிருப்பாளர்களை விழிப்புடன் இருக்குமாறு மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர அறிவுறுத்தியுள்ளார்.

எனினும், இலங்கையை அண்மித்துள்ள வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...