30th anniversary of jaffna hospital massacre 2 21 1508551957
இலங்கைசெய்திகள்

மீனவரின் கையை மீளப்பொருத்திய யாழ். போதனா வைத்திய நிபுணர்கள்!!

Share

மீனவரின் கையை மீளப்பொருத்திய யாழ். போதனா வைத்திய நிபுணர்கள்!!

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் வெளியிணைப்பு இயந்திரத்துக்குள் சிக்கி துண்டாடப்பட்ட மீனவரின் கை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வைத்திய நிபுணர்களால் மீளப் பொருத்தப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறைக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னாரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தவறிக் கடலில் வீழ்ந்துள்ளார்.

அவரது வலது கை மற்றும் வலது கால் ஆகியவை வெளியிணைப்பு இயந்திரக் காற்றாடிக்குள் சிக்கி சிதைந்தன.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், வைத்தியர்கள் கடும் போராட்டத்தின் பின்னர் அவரது கையை மீள இணைத்துள்ளனர். இந்த சத்திரசிகிச்சை சுமார் 5 மணி நேரம் நடந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் உட்பட வைத்திய நிபுணர்கள் இந்தச் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....