IMG 20220621 WA0138
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இன்று முதல் எரிபொருள் விநியோகம்!

Share

யாழ். மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு இன்று முதல் எரிபொருள் சீரான முறையில் விநியோகிக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து களுக்கான எரிபொருள் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டு வரும் நிலையில்,

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் வழங்கப்படாதமையை கண்டித்தும், இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலையில் இடம்பெற்ற அனர்த்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் தமது பேருந்துகள் சேவையில் ஈடுபடமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த நிலையில் உடனடியாக குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இது தரப்பினருடனும் யாழ். மாவட்ட செயலகத்தில் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது இன்று முதல் சீரான முறையில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கப்படும் எனவும் அதன் அடிப்படையில் தான் வழமைபோல் சேவையில் ஈடுபட உள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வட பிராந்திய முகாமையாளர் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 13
இலங்கைசெய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வட மத்திய, புத்தளம் மற்றும் திருகோணமலைக்கு மழை வாய்ப்பு! 

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (டிசம்பர் 11) வெளியிட்டுள்ளது. அதன்படி,...

25 67abee737d4d3
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச சேவையில் 2,284 புதிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அங்கீகாரம்! 

இலங்கை அரச சேவையில் தற்போது நிலவும் 2,284 பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...