WhatsApp Image 2022 10 08 at 7.24.59 PM.jpg 01
இலங்கைசெய்திகள்

நிதி நிறுவன மோசடி! – அரசியல்வாதிகளும் முதலீடு

Share

கொழும்பு உலக வர்த்தக மையத்தில் ஆடம்பரமான நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் கைதான திலினி பிரியமாலி என்ற பெண்ணின் நிதி நிறுவனத்தில் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி நிறுவனத்தில் முன்னாள் அமைச்சர் 15 கோடியும், முன்னாள் ஆளுநர் ஒருவரும் 10 கோடியும் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான முறைப்பாடு முன்னாள் ஆளுநரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதுடன், முன்னாள் அமைச்சரிடம் இருந்து இதுவரை முறைப்பாடு எதுவும் கிடைக்கப்பெறவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சந்தேகநபருக்கு சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரை, பிரபல பிக்கு ஒருவர் முதலீட்டிற்காக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கோடி ரூபாய் முதலீடு செய்தும் பலன் தராத நிலையில் அந்த பெண்ணிடம் பணம் கேட்டபோது பிரபல நடிகை ஒருவர் அந்த நபர்களுடன் செல்போனில் பேசியதை பதிவு செய்து பணம் கேட்டவர்களை விடுவிக்குமாறு மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நடிகை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கோடிஸ்வர தொழிலதிபர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் இலாப நோக்கம் கருதி வைப்புக்களை மேற்கொன்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் குறிப்பிட்ட வைப்புக்களுக்கான வட்டியினை செலுத்தாமை , அத்துடன் 226 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் 100,000 ஆகியவற்றை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கைதான இந்த திகோ குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...