sanakian 2
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பதவி விலகும் வரை போராடுங்கள்! – சாணக்கியன் வலியுறுத்து

Share

“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை , அவருக்கு எதிரான போராட்டத்தை மக்கள் கைவிடக்கூடாது. அவரின் வீடு மற்றும் அலுவலகம் முன் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சமீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ‘கோ ஹோம் கோத்தா’ என இடித்துரைத்து வருகின்றனர். அந்த ‘கோ ஹோம் கோத்தா’ என்ற தனிநபருக்கு எதிரான கோஷத்தை ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மாற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் முயற்சித்துவருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற போராட்டத்துக்கு தமது சகாக்களை ஆளுங்கட்சியினர் இறக்கியிருந்தனர்.

மக்கள் போராட இடமளித்து, பிரச்சினையை இழுத்தடிப்பதும் அல்லது மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தை வன்முறையாக மாற்றுவதற்குமே ஆளுந்தரப்பு முயற்சிக்கின்றது. இதற்கு இடமளித்துவிடக்கூடாது. இந்த அரசுக்கு எதிராக போராடி கிராம மக்கள் களைத்துவிட்டனர். எனவே, தற்போது மேல்மாகாணத்தில் தன்னெழுச்சி போராட்டங்கள் வலுக்க வேண்டும். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள மக்கள் போராட்டங்களை கைவிடக்கூடாது.

அரசியல் வாதிகள் ஏன் வீதிக்கு வரவில்லை என கேட்கின்றனர், நாங்கள் வந்தால் மக்களின் தன்னெழுச்சி போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டுவிடும். எனவே, ஒரு நாளில் ஓரிரு மணிநேரம் போராடி தீர்வை அடையமுடியாது. கோத்தாபய ராஜபக்ச பதவி விலகும்வரை அவரின் வீட்டுக்கு முன்னால் அமர்ந்து போராட வேண்டும். 10 பேர் போராட்டத்தை ஆரம்பித்தால் ஒரிரு நாட்களில் அது லட்சமாக மாறும். “ – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...

wether
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையினை பொறுத்தவரை இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில் அதிகரித்த வெப்பநிலை...

Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...